#BREAKING: அதிகரிக்கும் பாதிப்பு..டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை!

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு.

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் சற்று வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைவு என்றாலும், தற்போது ஒரு சில மாநிலங்களில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை இன்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 27-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த 30 வயதான இளைஞருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கேரளாவில் குரங்கம்மை பாதித்தோர் எண்ணிக்கை 5 -ஆக உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, டெல்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த 35 வயது இளைஞருக்கு குரங்கம்மை உறுதியான நிலையில், தற்போது டெல்லியில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment