#Breaking:தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில்..? – வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நாளை நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு,கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம்,கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர்,திருவண்ணாமலை, வேலூர்,நாமக்கல்,கரூர்,திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும்,தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.அதே சமயம்,சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும்,அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

Leave a Comment