#BREAKING: உயிரே போனாலும் பரவாயில்லை கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன் – ரஜினிகாந்த்..!

வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியாகும் என சற்று நேரத்திற்கு முன் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது, கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன்.

234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன். ஆனால், கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என தெரிவித்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டும் உயிர் பிழைத்து வந்ததற்கு காரணம் தமிழ் மக்களின் பிரார்த்தனைகள் தான். தற்போது வெளியே சென்று மக்களை சந்தித்து உயிரே போனாலும் அது தமிழக மக்களுக்காக என்பதில் எனக்கு சந்தோஷம் தான் உயிரே போனாலும் பரவாயில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்.
நான் வெற்றியடைந்தால் மக்களின் வெற்றி என்பது போல தோல்வியடைந்தாலும் அது மக்களின் தோல்வி தான்.

தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. மாற்றம் இப்போ இல்லைனா எப்பவும் இருக்காது. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்.. மாற்றுவோம்..அனைத்தையும் மாற்றுவோம் என ரஜினி தெரிவித்தார்.

 

author avatar
murugan