திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை :
சிவராத்திரியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மழையின் காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறைகளை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமை பள்ளி இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாளை மகா சிவராத்திரி பண்டிகை வருவதை ஒட்டி, முதன்மை கல்வி அலுவலர் திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.