#Breaking: குரூப் 2ஏ முறைகேடு – 2 ஆயுதப்படை காவலர்கள் பணியிடை நீக்கம்.!

  • குரூப் 2ஏ முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ள சித்தாண்டி, பூபதி ஆகிய இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக இருந்த சித்தாண்டி, பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான ஆயுதப்படை காவலர்கள் சித்தாண்டி, பூபதியை பணியிடம் நீக்கம் செய்து சென்னை காவலர் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதனிடையே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்ததை தொடர்ந்து தற்போது சித்தாண்டி கைது செய்யபப்ட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்