#Breaking : முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்..!

பாகிஸ்தானின் ஒய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் இன்று துபாய் மருத்துவமனையில் காலமானார். 79 வயதாகிய இவர் உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Pervez Musharraf

முஷாரஃப் 1999 இல் வெற்றிகரமான இராணுவ சதிக்குப் பிறகு பாகிஸ்தானின்  பத்தாவது ஜனாதிபதியாக பதவியேற்றார் . அவர் 1998 முதல் 2001 வரை 10 வது பாகிஸ்தானின் கூட்டுத் தலைவர்கள் குழுவின் தலைவர் (CJCSC) ஆகவும், 1998 முதல் 2007 வரை 7 வது உயர்மட்ட ஜெனரலாகவும் பணியாற்றினார்.

ஜெனரல் முஷாரப் மருத்துவ சிகிச்சைக்காக மார்ச் 2016 இல் துபாய்க்கு சென்றிருந்தார்,அவர் 2018 இல்  உயிருக்கு ஆபத்தான நோயான அமிலாய்டோசிஸ் நோயால் கண்டறியப்பட்ட பின்னர் அதன்பிறகு நாடு திரும்பவில்லை.

முன்னாள் பிரதம மந்திரி பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கு ஆகியவற்றில் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்பட்டார்.

1999 முதல் 2008 வரை பாகிஸ்தானை ஆட்சி செய்த முஷாரப் மீது தேச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, 2019ஆம் ஆண்டு அரசியலமைப்பை முடக்கியதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவரது மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment