#Breaking:பரபரப்பு…சுவரில் துளை;ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே,சேர்க்காடு பகுதியில்,அனில்குமார் என்பவரின் அடகு கடையின் சுவரில் துளையிட்டு ரூ.75 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் தங்க நகைகள்,30 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகைக்கடையில் நேரடியாக துளையிட கொள்ளையர்கள் முயற்சித்த நிலையில் அதன் பக்கவாட்டு சுவர்கள் மிகவும் உறுதியாக இருந்ததால்,அருகில் இருந்த மற்றொரு நபருக்கு சொந்தமான கடையினுள் சென்று துளையிட்டு,அதன்பின்னர் அக்கடையின் உள்ளே புகுந்து அடகு கடையின் பக்கவாட்டில் துளையிட்டு  ரூ.75 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் தங்க நகைகள்,30 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.மேலும்,நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவின் hard disk-யும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக,சற்று நேரத்தில் கைரேகை நிபுணர்கள்,மோப்ப நாய் உதவியுடனும் விசாரணை நடைபெறவுள்ளது.

 

 

Leave a Comment