#BREAKING : ஓமைக்ரான் தொற்று எதிரொலி – டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கூட்டங்களுக்கு தடை..!

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் எதுவும் நடைபெற கூடாது என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வகை கொரோனா தொற்றானது தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில், இந்தியாவைப் பொறுத்தவரையில் 200-க்கும் மேற்பட்டோர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் தான் அதிகமானோர் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது.

அதன்படி கடைகள் வணிக வளாகங்களில் முக கவசம் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் வகையில் கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் நடத்தவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.