BREAKING: தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனவால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டனர்.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 18-ஆக இருந்தது.கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் மதுரையில் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் இன்று முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .  

இந்நிலையில் தமிழகத்தில்  கொரோனா வைரஸால் 18 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 5 பேரில் 4 பேர் இந்தோனோசியாவை சார்ந்தவர்கள் , இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சென்னையை சார்ந்த ஓருருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் 5 பேரும் சேலத்தில்உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.

author avatar
murugan