#Breaking: சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12000-ஐ கடந்தது..!

சென்னையில் மேலும் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,581 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9909ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12,203 ஆக அதிகரித்துள்ளது. அதில் 95 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5,800 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 6,307 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.