#BREAKING: சாத்தான்குளத்தில் சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.!

சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸு சிறையில் உயிரிழந்த நிலையில் இவர்கள் இருவரும் காவலர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

உயிரிழந்த தந்தை மகன் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை அறிக்கையை கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் விசாரணையை தொடங்கும் வரை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதனால், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும்  நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், தந்தை, மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.

author avatar
murugan