#BREAKING: நடிகர் விஜய் மீதான வழக்கு.! இடைக்கால தடை அக்டோபர் வரை நீட்டிப்பு.!

புலி படத்திற்கு விஜய் தான் பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை கடந்த 2016, 2017- ஆம் ஆண்டுக்கான வருமானம் வரி கணக்கில் மறைத்ததாக கூறி வருமான வரித்துறை நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருந்தது.

இதற்கு நடிகர் விஜய் சட்டப்படி, உரிய காலத்தில் பிறப்பிக்கப்படாததால் அபராதம் உத்தரவு ரத்து செய்ய மனு தாக்கல் செய்து வழக்கும் தொடர்ந்திருந்தார்.   பிறகு கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வருமான வரித் துறை விஜய்க்கு விதித்திருந்த ரூ.1.5 கோடி அபராத உத்தரவை தடை செய்து , செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை அக்டோபர் 26 வரை நீட்டிகப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment