#BREAKING: பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயார் – அமைச்சர் சிவசங்கர்

தொலைதூர பேரூந்துகளுக்கான கட்டண உயர்வு பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அறிவிப்பு.

பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், தொலைதூர பயண பேருந்து கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயண பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து இதுவரை முதலமைச்சர் உத்தரவிட இல்லை என்றும் போக்குவரத்து கழகம் ரூ.48,500 கோடி கடனில் உள்ளது எனவும் அமைச்சர் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயருமா? இதுகுறித்து அரசின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment