எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு.
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மற்றும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தினங்கள் விடுமுறை என்பதால் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது.
இந்த சமயத்தில் எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அவை தலைவர் எடுத்துக்கூறியும், எதிர்ப்புகள் தெரிவித்து வந்ததால் உடனடியாக அவை ஒத்திவைக்கப்பட்டது. சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சனை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன.