#BREAKING: ஆருத்ரா கோல்டு நிர்வாக இயக்குநரை கைது செய்ய தடை!

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர் ராஜசேகரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ரூ.1,168 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோசடி வழக்கில் ராஜசேகர், கமல், ஜெய் கமல், ஜெயக்கொடி, நவீன், மாலதி ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், நிறுவனத்தில் வைப்பு நிதி செலுத்தியவர்களுக்கு பணம் திருப்பி தருவதை அரசு உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது. மனுதாரர்கள் நீதிமன்ற அனுமதியில்லாமல் நாட்டைவிட்டு வெளியேற கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment