#BREAKING: புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் திறப்பு.. கல்வித்துறை அறிவிப்பு.!

புதுச்சேரியில் ஜனவரி 4 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது.

புதுச்சேரியில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் வருகின்ற 4-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் விருப்பமுள்ளவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார். மேலும், ஜனவரி 18-ம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அப்போது, மாலை வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகுப்புகள் மாணவர்களின் விருப்பத்தின் படியே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan