#BREAKING: நிர்பயா குற்றவாளிகளின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி.! நாளை தூக்கு உறுதி.!

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதன் பின் குற்றவாளிகள் 4-பேருக்கும் நாளை தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகள் அக்சய் மற்றும் பவன் ஆகியோர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், 2-வது கருணை மனுவும் நிலுவையில் இருப்பதால், தங்களது மரண தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுயிருந்த நிலையில் தற்போது டெல்லி நீதிமன்றம் அக்சய் மற்றும் பவன் ஆகியோர் மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் நிர்பயா குற்றவாளிகளின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் நாளை தூக்கு தண்டனை உறுதியாகி உள்ளது. தூக்கில் போடுவது குறித்த ஒத்திகை நேற்று நடைபெற்றது  என்பது குறிப்பிடத்தக்கது. 

 

author avatar
murugan