#Breaking: தமிழகத்திலும் 1 முதல் 9 வரை அனைவரும் “ஆல் பாஸ்”!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. எற்கனேவே தேர்வு குறித்த தேதிகள் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் காரணமாக  ஒன்றாம் வகுப்பு  முதல் ஒன்பதாம்  வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி  அவர்கள் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் “ஆல் பாஸ்” என தமிழக முதல்வர் தற்போது அறிவித்துள்ளார்.