#BREAKING : தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…!

புதுச்சேரியில் ஜூன் 1-ஆம் தேதிக்கு பதிலாக 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதி முடிந்த நிலையில், மே மாதம் முழுவதும் கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோடைகால விடுமுறை முடிந்து ஜூன்1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்குமாறு கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது புதுச்சேரியில் ஜூன் 1-ஆம் தேதிக்கு பதிலாக 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்திலும் ஜூன் 1-ஆம் தேதிக்கு பதில், ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.