#BREAKING :நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.1.25 கோடி நிதி உதவி அளித்துள்ளார் நடிகர் அஜித்.

கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.இதேபோல் பிரதமர் மோடியும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் ஃபெப்ஸி தொழிலாளர்களின் நலனுக்காக ரூ.25 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கினார் நடிகர் அஜித்.