தமிழகத்தில் இன்று 5,043 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 5,883 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,90,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 108,124 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 118 பேர் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808-ஆக உயர்ந்துள்ளது.
இன்று 5,043 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 2,32,618 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.