#BREAKING : காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு..!

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு. 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவர்களின் உடல்களை தேடும் பணியில், எடப்பாடி தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு 

கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீச்சல் தெரியாத பாண்டியராஜன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், முத்துசாமி ஆகியோர்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment