#BREAKING: காணாமல் போன 4 மீனவர்களும் சடலமாக மீட்பு.!

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டையப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற போது, காணாமல் போன 4 மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டையப்பட்டினத்தில் இருந்து ஒரே படகில் சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பாத பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது, காணாமல்போன நான்கு மீனவர்களும் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

நேற்று செந்தில்குமார், சாம்சன் ஆகிய இரண்டு பேரின் உடலை மீட்ட நிலையில், தற்போது மெசியா, நாகராஜ் ஆகிய மேலும் இரண்டு உடலையும் மீட்டுள்ளது இலங்கை கடற்படை. 3 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த சாம்சன் சடலமாக மீட்கப்பட்டனர்.

இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மீனவர்களின் படகு கவிழ்ந்ததாக சக மீனவர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். மூழ்கிய மீனவர்களை மீட்காமல் இலங்கை கடற்படை சென்றதாகவும் தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்