#BREAKING : கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள்..! தேடுதல் பணி தீவிரம்..!

காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் மூழ்கினர்.

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற மாணவிகள் காவிரி ஆற்றில் இறங்கியபோது  இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீரில் மூழ்கிய மாணவிகள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளையும் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment