BREAKING:144 தடை குறித்து தலைமைச்செயலாளர் ஆலோசனை.!

தமிழகத்தில் இன்று மாலை 144 தடை உத்தரவு அமல்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது.எனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் சற்று நேரத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்த உள்ள நிலையில்  தடை குறித்து தொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்களும் கலந்துகொண்டு உள்ளனர்.

author avatar
murugan