#Breaking:அத்துமீறி நுழைந்த 11 ஈரானியர்கள் – அதிகாரிகள் அதிரடி!

அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரானியர்கள் 11 பேர் கைது.

இந்திய கடல் பகுதியில் கப்பலில் நுழைந்த ஈரானை சேர்ந்த 11 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்திய கடல் எல்லைப் பகுதியான அந்தமானை ஒட்டி உள்ள இந்திரா பாயிண்ட் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி ஈரானியர்கள் 11 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைதான 11 ஈரானியர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.மேலும்,ஈரானியர்கள் வந்த கப்பலில் குறிப்பிட்ட அளவிலான போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் அவர்களது கப்பல் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 11 பேரிடம் விசாரணை நடைபெற்றதையடுத்து தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.