எதிரிகளின் இலக்கை துடைத்து எரியும் பிரமோஸ் ஏவுகனை- மீனவர் வலையில் பாகம்…போலீசார் தீவிர விசாரணை.!

  • கடலூரில் மீனவர் வலையில்சிக்கிய  பிரமோஸ் ஏவுகனையின் உதிரிபாகம்
  • கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கூட்டு தாயரிப்பான பிரமோஸ் ஏவுகனை அதிகளவு  வெடிபொருட்களை தாங்கி சென்று எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

Image result for BEAHMOS

இந்நிலையில் கடலூர் மாவட்டம் தாழங்குடாவை சேர்ந்த மீனவர் அறிவழகன் என்பருடைய வலையில் பிரமோஸ் BIFP-04 ஏவுகனையின் உதிரி பாகம் சிக்கியுள்ளது.இந்த ஏவுகனை கடந்த வருடங்களில் ஏவப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஏவுகனையின் உதிரிபாகமான 60 கிலோ எடைக்கொண்ட உருண்டை வடிவிலான பாகத்தை பொதுமக்கள் ஆர்வத்தோடு பார்வையிட்டு செல்கின்றனர்.மேலும் இந்த உதிர பாகம் குறித்து கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

author avatar
kavitha