உயிரிழந்த காதலிக்கு தாலி கட்டிய காதலன்..!

அசாமில் உயிரிழந்த காதலிக்கு தாலி கட்டிய காதலனின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிடுப்பன் என்ற இளைஞரும் பிரார்த்தனா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில்,  இவர்களது காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிராத்தனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிராத்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், இறந்த நிலையில் இருந்த தனது காதலிக்கு தாலி கட்டுவதற்காக திருமணம் செய்வதற்கான ஏற்பாடுடன் பிரார்த்தனாவின் வீட்டிற்கு பிடுப்பன் வந்துள்ளார். மேலும் அங்கிருந்தவர்களிடம் தான் பிராத்தனாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பின் அவர் தன் வைத்திருந்த குங்குமத்தை உயிரற்ற நிலையில் இருந்த தனது காதலியின் முகத்தில் தடவி, மாலை அணிவித்து திருமண சடங்குகளை மேற்கொண்டார். தனது காதலிக்காக பிடுப்பன் செய்த செயல் அங்கு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இது குறித்து பிராத்தனாவின் பெற்றோர் கூறுகையில் முதலில் பிடுப்பனின் இந்த செயலுக்கு மறுப்பு தெரிவித்த நிலையில் பின் அவர் பிரார்த்தனா மீது அவர் கொண்ட காதலை எண்ணி திருமண சடங்குகளை மேற்கொள்ள அனுமதித்ததாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment