காய்ச்சலால் சிறுவன் பலி……!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குழந்தையை பெற்றோர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment