எல்லை விவகாரம்: லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது!

எல்லை விவகாரம் குறித்து இந்தியா-சீன ராணுவ முத்த கமாண்டர்கள் இடையிலான பேச்சுவார்த்தை, கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில் தொடங்கியது.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில்  மூன்று முறை பேச்சுவார்த்தை நடந்தது.

இந்நிலையில், இன்று இந்திய மற்றும் சீன ராணுவத்தின் முத்த கமண்டர்கள் சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தனர். அந்த பேச்சுவார்தையானது, தற்பொழுது கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில் தொடங்கியது.

தற்பொழுது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.