மும்பையை பந்தாடிய பட்லர்! கடைசி ஒவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

இன்று நடைபெற்ற  27-வது ஐபில் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது.இந்த போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி கேப்டன் ரகானே  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 187 சேர்த்தது.துவக்க வீரர் ரோகித் சர்மா 32 பந்துகளுக்கு 47 ரன்களும் டீ காக் 52 பந்துகளுக்கு 81 ரன்களும் விளாசினர். இறுதியாக வந்த ஹர்திக் பாண்டியா 11 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார்.

இதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்க வீரர் பட்லர் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடினார்.அவருக்கு ரகானே கம்பெனி கொடுத்தார்.பின் பட்லர் 89 ரன்களிலும்,ரகானே 37 ரன்களிலும் வெளியேறினார்கள்.

இறுதியாக ராஜஸ்தான் அணி  19.3 ஓவர்களில்  6 விக்கெட்டை இழந்து அணி 188 ரன்கள் அடித்தது.களத்தில் கவுதம் 0*,கோபால் 13* ரன்களுடன் இருந்தனர். இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி  வெற்றி பெற்றது.

 

Leave a Comment