விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை.! இந்திய விமானங்களால் துரத்தியடிக்கப்பட்ட ஈரான் விமானம்.!

இந்திய வான்வெளியில் நுழைந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பது போன்ற எச்சரிக்கை தகவல் கிடைத்தது. இதனால் இந்திய ஜெட் விமானங்களால் அந்த ஈரான் விமானம் வானில் துரத்தப்பட்டது.

ஈரானை பூர்வீகமாகக் கொண்ட விமானம் ஒன்று அக்டோபர் 3ஆம் (இன்று) தேதி டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு இருப்பதாக டெல்லியில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கிடைத்த தகவலின் படி, ஈரான் விமானம் டெல்லியில் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை.

அடுத்ததாக,  பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமான தளங்களில் இருந்து இந்திய விமானப்படையின் Su-30MKI போர் விமானங்கள் ஈரான் விமானத்தை வானில் இடைமறித்து துரத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி தற்போது அந்த விமானம் சீனாவை நோக்கி தனது விமானப் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Varathalakshmi

Leave a Comment