தூக்கிலிடப்பட்ட 4 பேரின் உடல்கள் தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை.?

நிர்பயா குற்றவாளிகள் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகிய 4 பேருக்கும் ஒரே நேரத்தில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் பணியை பவன் ஜல்லாத் நிறைவேற்றினார். 4 பேரின் உடல்கள் டெல்லியில் உள்ள  தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தகவல் வந்துள்ளது. 

இதனிடையே அடுத்தடுத்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியான நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2012 டிசம்பரில் நடைபெற்ற சம்பவம் 2020 மார்ச் மாதம் 20ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்