உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி தனது பலத்தை நிரூபிக்கும்:தமிழிசை

உள்ளாட்சி தேர்தலில் பாஜக சக்தியை நிரூபிக்கும் எனவும், தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக பாஜக மாறி வருவதாகவும் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது.
இதையடுத்து அடுத்தடுத்து தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.
author avatar
Castro Murugan

Leave a Comment