வரலாற்றில் இன்று-திராவிட நாடு எனும் தனி நாடு கோரிக்கையை கை விடுவதாக தி. மு. க செயற்குழு…!

வரலாற்றில் இன்று – 1963, நவம்பர் 3 – திராவிட நாடு எனும் தனி நாடு கோரிக்கையை கை விடுவதாக தி. மு. க செயற்குழு தீர்மானம் இயற்றியது. தனி நாடு கோருவதை சட்ட விரோதம் ஆக்கி, “பிரிவினை தடை” சட்டத்தை மத்திய அரசு 1963_ல் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை வைத்து, தி.மு.கழகத்துக்கு தடை விதிக்கப்படலாம் என்று கருதப்பட்டது. இதன் காரணமாக, திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை கைவிடுவதாக, தி.மு.கழகத் தலைவர் அண்ணா அறிவித்தார்.
25_10_1963 அன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:_
“பிரிவினை தடை” சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதால், திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை கைவிட தி.மு.கழகம் முடிவு செய்து இருக்கிறது. தி.மு.கழகம், சட்ட வரம்புக்கு உட்பட்ட கட்சியாக இயங்க விரும்புவதால், இந்த முடிவுக்கு வந்து இருக்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment