உண்மையைக் கூறாமல் பாஜக அரசு ஓடி ஒளிகிறது – கே.எஸ்.அழகிரி விமர்சனம் .!

லடாக்கில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அஞ்சலி செலுத்திய பின்னர் பேசிய கே. எஸ் அழகிரி, காங்கிரஸ் ஆட்சியில் ஒரு வீரரின் உயிரையோ அல்லது ஒரு அங்குல இடத்தையோ இழக்கவில்லை என்றார்.

லடாக் எல்லையில் சீன ஊடுவருல் குறித்த உண்மையைக் கூறாமல் பாஜக அரசு ஓடி ஒளிந்து கொள்வதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். மேலும், மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது 600 முறை இந்திய எல்லையில் ஊடுருவல் நடந்துள்ளது. அதுவே மோடி ஆட்சியில் இருக்கும்போது 2,263 முறை ஊடுருவல் நடந்துள்ளது. 

எது அதிகாரபூர்வமான செய்தி , இதற்கு ஜே.பி நட்டா, மோடி என்ன சொல்கிறார்..? என்று கேள்வி எழுப்பினார்.

author avatar
murugan