கனிமொழி பதிவிட்ட டீவீட்டிற்கு, பாஜக கட்சியின் (பொறுப்பு) பொதுச்செயலாளர் சந்தோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தல் நெருங்க எட்டு மாதங்கள் உள்ளன. தற்போது பிரச்சாரம் தொடங்கிவிட்டது. என்று பதிவிட்டிருந்தார்.
திமுக மகளிரணி தாலைவியும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி நேற்று பிற்பகல் டெல்லி செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது அங்குள்ள ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி கனிமொழியிடம் இந்தியில் ஆவணங்களை கேட்டுள்ளார். அதற்கு எம்பி கனிமொழி ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி நீங்கள் இந்தியரா என்று கேட்டதாக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
இதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சியின் ( பொறுப்பு )பொதுச்செயலாளர் சந்தோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தல் நெருங்க எட்டு மாதங்கள் உள்ளன. தற்போது பிரச்சாரம் தொடங்கிவிட்டது. என்று பதிவிட்டிருந்தார்.
அதாவது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது. ஆதலால் தற்போது அதனை குறிப்பிட்டு பாஜக தலைவர் இவ்வாறு கருத்தை பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரத்தில் எந்த மொழிக்கும் தனிப்பட்ட மொழிக்கும் முன்னுரிமை கிடையாது. இது குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம் என பதிவிட்டுள்ளனர். இந்த உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து கனிமொழி தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…