கனிமொழி பதிவிட்ட டீவீட்டிற்கு, பாஜக கட்சியின் (பொறுப்பு) பொதுச்செயலாளர் சந்தோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தல் நெருங்க எட்டு மாதங்கள் உள்ளன. தற்போது பிரச்சாரம் தொடங்கிவிட்டது. என்று பதிவிட்டிருந்தார்.
திமுக மகளிரணி தாலைவியும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி நேற்று பிற்பகல் டெல்லி செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது அங்குள்ள ஒரு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி கனிமொழியிடம் இந்தியில் ஆவணங்களை கேட்டுள்ளார். அதற்கு எம்பி கனிமொழி ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும்படி கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி நீங்கள் இந்தியரா என்று கேட்டதாக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
இதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சியின் ( பொறுப்பு )பொதுச்செயலாளர் சந்தோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தல் நெருங்க எட்டு மாதங்கள் உள்ளன. தற்போது பிரச்சாரம் தொடங்கிவிட்டது. என்று பதிவிட்டிருந்தார்.
அதாவது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2021 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது. ஆதலால் தற்போது அதனை குறிப்பிட்டு பாஜக தலைவர் இவ்வாறு கருத்தை பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரத்தில் எந்த மொழிக்கும் தனிப்பட்ட மொழிக்கும் முன்னுரிமை கிடையாது. இது குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம் என பதிவிட்டுள்ளனர். இந்த உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து கனிமொழி தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…
Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பை வருகிற 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலைக்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம்…
IIT JAM 2024 : ஐஐடியில் முதுகலை படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் மிகவும்…
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல்…