பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரங்கநாத் என்பவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளன. இதனிடையே, ரங்கானத்திற்கும், அருகேயுள்ள போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரங்கநாத் மகனின் பிறந்தநாளை அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் ரங்கநாத்தை தாக்கி கொடூர கொலை செய்தனர்.
இந்நிலையில், பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து போராட்ட இடத்துக்கு வந்த டி.எஸ்.பி அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இதனிடையே அந்த கிராமத்தை சேர்ந்த தமிழ் என்பாரின் மரக்கடை சூறையாடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார்கள் குவித்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…