தமிழகத்தில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த அரசு முடியு செய்துள்ளது.
அதன்படி ரேஷன் கடைகளில் எந்த பொருட்களை வாங்க வேண்டும் என்றாலும் பயனாளிகள் அவர்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.
பயனாளிகளின் பெயரில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க இந்த திட்டம் ஒரு சில மாதங்களில் நடைமுறை படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி மாநிலம் முழுவதும் 34,772 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரங்கள் பொருத்தப்படுகிறது.
இதன் மூலம் ரேஷன் கடைகளில்நடக்கும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.