வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் தேவையின்றி பைக்கில் சுற்றினால் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து – மாவட்ட ஆட்சியர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு யாரும் வெளிய வர கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி அரசு உத்தரவை மீறி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அந்தந்த மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று முதலவர் பழனிசாமி தெரிவித்திருந்தார். 

 144 தடை உத்தரவை மீறி வாகனங்களில் பயணம் செய்தோர் மற்றும் வெளியே தேவையில்லாமல் சுற்றியவர்கள் மீது காவல்துறையினர்  வழக்குபதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் தேவையின்றி பைக்கில் சுற்றினால் லைசென்ஸ் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.