பீகார் மாநிலத்தில் வரும் 15ம் தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுபோன்று பீகாரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எனவே, பீகாரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு, சில புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் மே 15 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் அப்போது, மே 15 வரை நீடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன் விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் தொடர்பாக, இன்று நிர்வாகக் குழு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…