பீகாரில் பரபரப்பாக நடைபெறும் சட்டமன்ற தேர்தல்! 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

அவுரங்காபாத்தில் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பீகாரில் சட்டசபை தேர்தலானது. 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பரபரப்பான தேர்தல் காலத்திற்கு மத்தியில், அவுரங்காபாத்தில் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 வெடிகுண்டுகளை, காவல்துறையினர் செயலிழக்க செய்துள்ள நிலையில், தேர்தலுக்கு மத்தியில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அங்கு பெரும் பராபராப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.