பொள்ளாச்சி சம்பவம் குறித்து இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் அண்மையில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் சர்ச்சையான கருத்துக்களை அந்த விழாவில் தெரிவித்தார். தற்போது அவரது பேச்சு இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
எம்.பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரித்துள்ள ‘கருத்துக்களை பதிவு செய்’ எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் பாக்யராஜ் அரசியல் பிரமுகர் விஜயதாரணி, எஸ்.வி.சேகர், மீராமிதுன் என பலர் கலந்து கொண்டனர்.
அவ்விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பல சர்ச்சையான கருத்தை முன்வைத்தார். அவர் பேசும்போது, ‘அனைத்து பெரிய திரையரங்குகளிலும் சிறிய திரைப்படமும் ஓடும்படி அரசு ஒரு சட்டம் இயற்ற வேண்டும். என கேட்டுக்கொண்டார். மேலும், இன்று போய் நாளை வா, கைதியின் டைரி என இரு படங்களையும் ஒரே இரவில் நான் எழுதி முடித்தேன். எனவும், தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை அந்த ஆண்கள் பயன்படுத்தி கொண்டனர். எனவும், இதற்கு ஆண்கள் மட்டும் பொறுப்பல்ல. அந்த பெண்களிடமும் தவறு உள்ளது எனவும் பேசினார்.
‘ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என்றும் தெரிவித்தார். பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆண் தவறான நடத்தையில் இருந்தாலும் தான் கட்டிய முதல் மனைவிக்கு குறை வைப்பதில்லை எனவும், ஆனால், ஒரு பெண் நடத்தை சரியில்லாமல் போனால் தன் கணவனை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறாள் எனவும் சர்ச்சையான கருத்தை தெரிவித்தார்.
இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜ் இந்த சர்ச்சை கருத்துக்கள் தற்போது இணையத்தில் பேசும் பொருள் ஆகி வருகின்றன.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…