BGT2023: ட்ராவை நோக்கி 4-வது டெஸ்ட்; ஆஸ்திரேலியா நிலையான ஆட்டம்.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் 5-வது நாள் தேநீர் இடைவேளை முடிவில் ஆஸ்திரேலியா 158/2 ரன்கள் குவிப்பு.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்களும், இந்தியா 571 ரன்களும் குவித்தன.

இரண்டாவது இன்னிங்க்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா நிதானமாக விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் குனேமன் களமிறங்கினர். 6 ரன்களில் குனேமன், தனது விக்கெட்டை அஷ்வினிடம் பறிகொடுத்தார். இதன்பிறகு இறங்கிய லபுஸ்சன்(56* ரன்கள்), டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து பொறுப்புடன் விளையாடி வருகின்றனர்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிராவிஸ் ஹெட் 90 ரன்களில் அக்சர் பட்டேல் பவுலிங்கில் போல்டானார். தேநீர் இடைவேளை முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்துள்ளது. லபுஸ்சன் 56* ரன்கள் மற்றும் ஸ்மித் 0* ரன்கள் எடுத்து களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணியை விட ஆஸ்திரேலியா 67 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment