சிறந்த ஆட்சியர்.. திருவள்ளூர் மாவட்டத்துக்கு முதல் பரிசு!

சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பிரிவில் திருவள்ளூருக்கு முதல் பரிசை வழங்கினார் முதலமைச்சர்.

சென்னையில் சமூக நலத்துறை சார்பில் நடந்து வரும் சர்வதேச மகளிர் தின விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் ஒளவையார் உள்ளிட்ட விருதுகளைய் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பிரிவில் திருவள்ளூருக்கு முதல் பரிசை வழங்கினார் முதலமைச்சர். இதுபோன்று,, நாகை மாவட்ட நிர்வாகத்துக்கு இரண்டாம் பரிசும், நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment