பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு ஒரே நாளில் ₹225 கோடி நஷ்டம்!!

கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், அவுட்டர் ரிங் ரோடு (ஓஆர்ஆர்) பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு ₹225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் (ஓஆர்ஆர்சிஏ) தெரிவித்துள்ளது.

ஓஆர்ஆர் இல் உள்ள IT நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் $22 பில்லியன் வருவாய் ஈட்டுகின்றன, இது பெங்களூரின் மொத்த IT வருவாயில் 32% ஆகும். ஓஆர்ஆர் இல் உள்ள மோசமான உள்கட்டமைப்பு, இங்கு அமைந்துள்ள நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனைக் குறைத்து, ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஆபத்தில் ஆழ்த்துகிறது.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, ஓஆர்ஆர் இல் ஏற்பட்ட வெள்ளத்தால் தொழில் வல்லுநர்கள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் சிக்கித் தவித்ததால் ₹225 கோடி இழப்பு ஏற்பட்டது. விரிவான ஓஆர்ஆர் BMRCL 2A மெட்ரோ ரயில் திட்ட காலக்கெடு பகிரப்பட்டு கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அலுவலக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment