6 மாத குழந்தையின் உயிரை பறித்த வண்டு..!

கேரள மாநிலம், திருவனந்தபுரம், காசர்கோடு அடுத்து சென்னிக்கரையை சேர்ந்தவர் சத்தியேந்திரன். இவருக்கு மனைவியும் 6 மாதத்தில் அன்வேத் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் 10-ஆம் தேதி குழந்தை அன்வேத் வீட்டில் தவழ்ந்து தவழ்ந்து விளையாடி வந்துள்ளது. திடீரென அப்போது மயக்கம் அடைந்து குழந்தை கீழே விழுந்தது. இதனை பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை காசர்கோடு  அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

ஆனால் குழந்தை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. இறுதியாக குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பபட்டது. பிரேத பரிசோதனையில், குழந்தையின் மூச்சுக்குழாயில் ஒரு வண்டு ஒன்று சிக்கியிருந்துள்ளது. இதனால் குழந்தைக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.