அதீத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் தென்மாவட்ட மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருவது போல பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
தற்போது பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பினாலும், இன்னும் பல்வேறு இடங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. அதனை அறிந்து அவர்களுக்கு உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்கள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
அதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் மநீம தலைவர் கமல்ஹாசன், களத்தில் நேரடியாக உதவி செய்யும் தன்னார்வலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அவர் கூறுகையில், சென்னையில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவியது போல, தென் மாவட்ட மக்களுக்கும் பலர் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளனர். சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படும்.
உதவிக்கு தன்னார்வலர்கள் செல்லும் போது பாதுகாப்பாக திட்டமிடலுடன் செல்ல வேண்டியது அவசியம். அந்த திட்டமிடல் இல்லாததன் காரணமாகவே உதவிகள் திரட்ட இவ்வளவு தாமதமாகிறத. சரியான அதிகாரிகளிடம் முறையாக கலந்தாலோசித்து, திட்டமிட்டு உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும். உதவி செய்ய போகும் நபர்கள் ஆபத்தில் மாட்டிவிட கூடாது. பிறகு அவர்களை காப்பாற்ற இன்னொரு ஆள் வரும்படி செய்து விட கூடாது.
தற்போது தென்னகத்தில் நிலைமை சற்று சீராக உள்ளது. இருந்தும் உதவி தேவைப்படுவோருக்கு நாம் உதவ வேண்டும் என கூறினார். மேலும் அனைவருக்கும் ஆரோக்கியமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறினார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.
Ghee-நெய் சாப்பிடும் முறை மற்றும் யாரெல்லாம் எவ்வாறு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். நெய் நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்தா ஆயுர்வேதத்தில் முக்கிய…
சென்னை: மே 22இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் தென் இந்திய…
Samsung Galaxy F55 5G: நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட இருந்த கேலக்ஸி எஃப்55 5ஜி மொபைல் மே 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. தென்…
சென்னை : நடிகை மடோனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை மடோனா அடிக்கடி தனது சமூக…
சென்னை: அணு ஆயுத உற்பத்தி மற்றும் சோதனையை வடகொரியா அரசு அதிகரித்து வருகிறது. ராணுவம், பாதுகாப்பு, அணு ஆயுதம் என உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் அடுத்தடுத்த…
சென்னை : இன்று ஐபிஎல் தொடரில் சென்னை அணியும் மற்றும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான தோனியும், விராட் கோலியும் இணைந்து…