போராட்டத்தில் இறங்கிய பங்களாதேஷ் வீரர்கள்..! இந்திய அணியுடன் தொடர் நடக்குமா..? குழப்பத்தில் ரசிகர்கள் ..!

பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற 03-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந் நிலையில் பங்களாதேஷ் அணி வீரர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மக்முதுல்லா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதை அறிவித்து உள்ளனர். இதனால் இந்தியாவில் வந்து பங்களாதேஷ் அணி விளையாடுமா என்ற சந்தேகம் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.

author avatar
murugan